சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் சட்டவிரோதமானது ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது சட்டவிரோதமானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்தியை திணிக்கவே மத்திய அரசு நவோதயா பள்ளியை கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது சட்டவிரோதமானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *