ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர்புற பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் 18 புள்ளி 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் தொட்டிகளை பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து மொடச்சூர் மேல்நிலைபள்ளியில் 11 புள்ளி 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பச்சோந்திபோல் நிறம் மாறுபவன் தாம் இல்லை என்றும் அரசியல் வயது கூட இல்லாதவர்கள் தம்மை பற்றி கருத்து தெரிவிப்பது வேதனைக்குரியது என்றும் தெரிவித்தார்.
2017-10-29