கந்து வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ராமாநதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருநெல்வேலியில் கந்து வட்டிக் கொடுமைக்கு 4 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது என்றும் கந்து வட்டியை தடுக்க மத்திய,மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் இதனை தடுக்க வட்டியில்லாவங்கிக்கடன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு ஆகியவற்றால் சிறு தொழில்நிறுவனங்கள்,பெருவணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பெரிது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசின்பணமதிப்பு இழப்பைக் கண்டிக்கும் வகையில் நடைபெறும் கருப்பு தின போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியும் கலந்துக்கொள்ளும் என அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *