மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, ஒடிசா மாநிலம் பூரி அருகே தற்போது நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி பூரி அருகே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், கடலூர், பாம்பன், நாகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2017-10-21