டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.. அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு;

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரத்தில் அ.தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் மக்களுக்கு தடையின்றி தமிழக அரசு மின்சாரம் வழங்கி வருவதாகவும், 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருக்கும் என்றும் கூறினார். தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறவே மத்திய அரசுடன், தமிழக அரசு இணக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *