காசநோய் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மாமல்லபுரத்தில் தமிழக தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து நடத்திய கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், இதனை கூறினார்.
தமிழக முதல்-அமைச்சரால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காசநோய் இல்லாத சென்னை என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது என்றார்.
இதன்மூலம் நோயாளிகளை இல்லம் தேடி சென்று காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.