வட மாநிலங்களில் நீடிக்கும் கடும் குளிரால் மக்கள் அவதி

வட மாநிலங்களில் நீடிக்கும் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம்,உத்ரகாண்ட் ஆகிய இமயமலை வட்டார மாநிலங்கள் மட்டுமின்றி, பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தரபிரதேச மாநிலங்களிலும் பனியின் ஆதிக்கம் நீடிக்கிறது. இமயமலையில் இருந்து இடைவிடாது வீசும் பனிக்காற்றால் இப்போது, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மேற்கு மாநில மக்களும் வாடையில் வாடுகிறார்கள்.

காலை மற்றும் இரவு நேரங்களில் பனி மூட்டம் சூழ்ந்து கொள்வதால் அந்த மாநிலங்களில் சாலை, ரயில் மட்டுமின்றி விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் குளிரால், அவதிப்படும் டெல்லி நகர தெருவோர வாசிகள், காப்பங்களில் புகுந்தும், கம்பளி போர்த்தியும், தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *