சிக்கிம் மாநிலத்தில் பனியில் சிக்கிய சுற்றுலா பயணிகள் 2500 பேர் மீட்பு

சிக்கிம் மாநிலத்தில் பனிப் பொழிவில் சிக்கித் தவித்த 2500 சுற்றுலாப் பயணிகளை ராணுவ வீரர்கள் மீட்டனர்.

சிக்கிம் மாநிலத்தில்  இந்தியா-சீன எல்லைக்கு மிகவும் அருகில் உள்ள நதுலா என்ற இடத்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு பனிப்பொழிவு நீடித்தது. இதுபற்றி தகவல் அறிந்த ராணுவ வீரர்கள், அங்கு சென்று பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள்  2500  பேரை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *