ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள ரஜோரி மாவட்டத்தின் மஞ்கோட் செக்டார் பகுதியிலும் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் நிலைகள் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் படையினரின் தாக்குதலையடுத்து இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பாகிஸ்தான் படையினர் இந்திய எல்லையை தாண்டி தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
2017-10-19