18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக வரும் என்று நம்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. உக்கம்சந்தின் உருவப்பட திறப்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் திமுக தானாகவே ஆட்சிக் கட்டிலில் ஏறும் என்று தெரிவித்தார்.