வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் இந்திய வீரர்களுடன், அவர்களது மனைவிகள் தங்குவதற்கான காலத்தை நீட்டிக்கும் விவகாரத்தில் தற்போது வரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. வெளிநாட்டுத் தொடர்களின் போது வீரர்களுடன் அவர்களின் மனைவி மற்றும் தோழி தங்குவதற்கு 2 வாரங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேட்டிருந்தார்.
இதற்கு ஒப்புதல் வழங்கியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இதை பிசிசிஐ மறுத்துள்ளது, இந்த விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள பிசிசிஐ, பலரது கருத்துகளை கேட்க வேண்டியுள்ளதால், முடிவெடுக்க இன்னும் சில காலம் ஆகும் என்று கூறியுள்ளது.