மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதிய டிரக்கின் ஓட்டுநர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோத்ரா-ரட்லம் இடையே திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிரக் ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. இந்த கோர விபத்தில் டிரக் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.
ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் சேதமடைந்த பெட்டிகள் அகற்றப்பட்டு அந்த பெட்டியில் இருந்த பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது.