குட்கா ஊழல் தொடர்பாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அமைச்சர் விஜயபாஸ்கர், இரண்டு டிஜிபிக்கள் பெயர்கள் இல்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், .குட்கா விசாரணையை கண்காணிக்கும் பொறுப்பை கண்காணிப்பு ஆணையரிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்துள்ளதால், அமைச்சர், டிஜிபி மீது எப்ஐஆர் பதிவு செய்ய செய்ய தடையாக இருப்போர் மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கூறினார். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கொசு மருந்து வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.