டெங்கு காய்ச்சல் தடுப்பு நிதிக்காக யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வழங்கும் பணியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது, அவர் சிறிதுநேரம் கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தை தூக்கிக்கொண்டுச் சென்று கொசு மருந்து அடித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தற்போது ஒதுக்கியுள்ள 8 கோடி நிதியை செலவு செய்ய யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *