8 வழி சாலையினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை சேலத்தருகில் சந்தித்து பேசியதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
இது முற்றிலும் ஜனநாயத்திற்கு எதிரானது. தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன். இது போன்ற அடக்குமுறை அராஜக போக்கை கைவிட்டு நாம் தமிழர் கட்சி தலைவர் திரு.சீமான் அவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
2018-07-18