ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை கிலோ 25 ரூபாயாக உயர்வு ; விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு

நியாயக் விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை ஒரு கிலோவுக்கு 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரையை மானிய விலையில் 13 ரூபாய் 50 காசுகளுக்கு அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒரு கிலோ சர்க்கரை விலையை 25 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பழைய விலையான 13 ரூபாய் 50 காசுகளுக்கே ஒரு கிலோ சர்க்கரை விற்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *