தமிழகத்தில் நேற்றுமுதல் வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியது. இதனால், சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பாடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல், மதுரை, திருவள்ளூர், விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு காற்று வீசுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது என்று கூறினார்.