ஜப்பான் தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி பெறுவார் என்று வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிகின்றன.

ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் லேன் சூறாவளி காரணமாக கனமழை பெய்து வரும் நிலையிலும், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இந்நிலையில், மொத்தமுள்ள 465 இடங்களில் ஷின்சோ அபே-வின் கூட்டணி 311 இடங்களில் வெற்றி பெறும் என்று வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் பிரதமர் ஷின்சோ அபேயின் செயல்பாடுகள் உள்ளிட்டவை மக்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவர் வெற்றி பெறுவது உறுதி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *