கிளாசிக், மேஸ்ட்ரோ வகை டெபிட் கார்டுகளை வைத்திருக்கும் SBI வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே எடுக்கும் புதிய நடைமுறை, புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
SBI வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து ஒருநாளில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நாற்பதாயிரம் ரூபாயாக இருந்தது. இந்த உச்சவரம்பை நாற்பதாயிரம் ரூபாயில் இருந்து இருபதாயிரம் ரூபாயாகக் குறைக்கப்போவதாக, இம்மாத தொடக்கத்தில், SBI அறிவித்திருந்தது.
கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் அட்டைகளுக்கான இந்தக் குறைப்பு புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை ஆகியவற்றை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை என SBI கூறியிருக்கிறது.