6 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கி முகாம் நடத்தவுள்ளோம்: தமிழிசை

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ஆய்வு செய்ய மத்தியக் குழுவை பிரதமர் மோடி உடனடியாக அனுப்பி வைத்துள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டெல்டா மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடமாடும் மருத்துவ முகாம் அமைக்க திட்ட மிட்டுள்ளதாகவும், அதற்காக தாம் அங்கு 6 நாட்கள் தங்கியிருந்து தேவையான உதவிகளை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *