கஜா புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் நூறு சதவீதம் மீனவர்கள் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் 333 மீனவ கிராமங்களின் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சேதமதிப்புகளை கணக்கிட அந்த மாவட்டங்களுக்கு வருவாய்த்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்றுள்ளதாகவும் கூறினார்.
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பாரட்டியிருப்பது ஆரோக்கியமானது என்று கூறிய அவர், ஸ்டாலினுக்கு அரசின் சார்பில் நன்றி தெரிவித்தார்.