வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி ரூ.1.5 கோடி மோசடி செய்த தாய், மகள் கைது

சென்னையில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த தாயும், மகளும் கைது செய்யப்பட்டனர்.

நங்கநல்லூரைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், வளசரவாக்கத்தைச் சேர்ந்த அமுதாவும், அவரது மகள் மோனிஷாவும், அதே பகுதியில், வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்ததாகவும், தனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஐந்து லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து விசாரித்தபோது அமுதா, மோனிஷா ஆகியோர், 175 பேரிடம், ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்தது தெரிய வந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

தாயும், மகளும் பெங்களூருவில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *