மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவிலில் இருந்து திருடப்பட்டு மீட்கப்பட்ட சிலைகள் ஒவ்வொன்றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விலை மதிப்பிருக்கும் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீட்டெடுக்கும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுகவை மீட்க உரிய சட்டப்போராட்டத்தை மிகத்தீவிரமாகவே மேற்கொண்டுவருவதாகவும், நல்ல தீர்ப்பை நீதிமன்றம் சொல்லும் நல்லநாள் வந்தே தீரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் சட்டப்பூர்வமாக மீட்டெடுக்கும் அந்த நல்ல நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 90 சதவீதத்திற்கு மேலான உண்மையான தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தோடு உள்ளனர் என்றும், இனி வரக்கூடிய காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அ.தி.மு.கவை மீட்டெடுக்கும் காலமாகவே அமைந்திடும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.