தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கஜா புயலின் போது வீசிய காற்றால் வாழை மரங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று பெரியகுளம் அடுத்த கருவேல்நாயக்கன்பட்டியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரத்தும் மேற்பட்ட வாழை மரங்களும், 6 ஏக்கர் பரப்பளவில் இருந்த கரும்புகளும் சாய்ந்தன.