அரசு சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கடந்த கால பேரிடர்களோடு ஒப்பிடுகையில் கஜா புயலில் பெருமளவு உயிர்ச்சேதங்கள் குறைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் சேதங்களை பார்வையிட வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், முன்னதாக துறைமுகம் பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேதமடைந்த மீனவர் படகுகள் குறித்தான அறிக்கை அளிக்கப்பட்டவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.