பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் தீ விபத்து

கோவையில் பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

போத்தனூர் குமரன் நகரில் சின்னதுரை என்பவர் பிளாஸ்டிக் மற்றும் பாத்திரங்கள் குடோன் நடத்தி வருகிறார். இங்கு மின்கசிவு காரணமாக தீப்பற்றிய பொருட்கள் கொளுந்துவிட்டு எரிந்ததால் அதிகளவில் புகை வெளியேறியுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அருகில் இருந்த வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *