தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் மீதான நிதிமுறைகேடு புகார் குறித்து சிபிஐ முதல்கட்ட விசாரணை

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் மீதான நிதிமுறைகேடு புகார் குறித்து சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்நிறுவனம் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ், மத்திய அரசின் நிதியுதவியைப் பெற்று இயங்குகிறது. தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராக இருந்த நினா லத் குப்தா  சன் டிவி நெட்ஒர்க்கிற்கு சாதகமாக நடந்துகொண்டதாகக் கூறி கடந்த பிப்ரவரியில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையே, தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள், சன் டிவி, யுஎஃப்ஓ மூவிஸ், அனுராக் காஷ்யப் ஃபிலிம் உள்ளிட்டோர் மீது கடந்த அக்டோபரில் சிபிஐ பூர்வாங்க விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அளவுக்கு அதிகமாகவும் தேவையற்ற முறையிலும் பணம் வழங்கியது உள்ளிட்டு, நிதிமுறைகேடு மற்றும் விதிமீறல் புகார் தொடர்பாக சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *