தமிழகம் முழுவதும் 67,654 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், இன்று மூன்றாம் கட்ட வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யும் முகாம் நடைபெறுகிறது. செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர்.

வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதவிர பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்காக, கடந்த மாதம் 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில், இன்று 3வது கட்டமாக, 67 ஆயிரத்து 654 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *