ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பவானிசாகர், இக்கரைதத்தப்பள்ளி, கொத்தமங்கலம், ராஜன்நகர், புதுவடவள்ளி, சிக்கரசம்பாளையம் பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, சத்தியமங்கலம் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக வரத்து கடுமையாகக் குறைந்து வரும் நிலையில் தற்போது, பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மல்லிகைப்பூ கிலோ ரூ.1600 க்கும், முல்லை ரூ.640க்கும் விற்பனையானது.