கைகழுவும் பழக்கத்தை பின்பற்றி பன்றிக்காய்ச்சலில் இருந்தும், கொசுக்களிடமிருந்து தற்காத்துக் கொண்டால் டெங்குக் காய்ச்சலில் இருந்தும் தப்பலாம் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள அரசு அலுவலர் குடியிருப்பில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்கள் உள்பட இந்தியா முழுக்க பன்றிக்காய்ச்சலால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்து பன்றிக் காய்ச்சல் பரவும் என்பதால், கை கழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்றார். மேலும், டெங்கு பரப்பும் கொசுக்கள் காலை, மாலை வேளைகளில் உலவும் என்றும், அந்நேரங்களில் முழுக்கை, முழுக்கால் ஆடைகள் அணிந்து தற்காத்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்