கடலூர், நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நாகை, கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக இன்று அந்த 7 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கடலூர், காரைக்கால், புதுச்சேரியில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அளித்துள்ளது. இதேபோல் கஜா புயல் கரையைக் கடக்கவுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *