லைக்கா நிறுவனம் கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கஜா புயலால் 7 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளுக்காகவும், மக்களின் துயர் துடைக்கவும், நிவாரணைப் பணிகளை மேற்கொள்ளவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு லைகா குழுமம் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.