பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 111 வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது குருபூஜை விழா இன்று அதிகாலை தொடங்கியது. இன்று ஆன்மீக விழாவும், நாளை அரசியல் விழாவும் நாளை மறுநாள் குருபூஜை விழாவும் நடைபெறுகிறது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதை முன்னிட்டு, தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆள் இல்லா விமானங்கள் மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.