புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டி கிராமத்தில் மருத்துவமனை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் .
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுபட்டி கிராமத்தில் மருத்துவமனை அமைக்க, அரசு அறிவிப்பு செய்து இருந்தது மேலும் அதற்கான ஆரம்ப வேளைகளை அரசு செய்து இருந்தது , இந்நிலையில் அந்த பகுதியில் அமைய உள்ள மருத்துவ மனையை மாவட்ட நிர்வாகம் வேரு ஒரு கிராமத்தில் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் பரவியதையடுத்து விசி கட்சியில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் சந்திரபாண்டியன் தலைமையில், புதுபட்டி கிராமபகுதி பொது மக்கள் சாலை மறியல் செய்தனர் .இதனால் கறம்பக்குடி புதுக்கோட்டை ,ஆலங்குடி பகுதிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் 3 மணி நேரம் காத்துகிடந்தன.
இதையடுத்து கறப்பகுடி டிஎஸ்பி தலைமையில் வரும் 27ம் தேதி மாவட்ட உதவி ஆட்சியர் சராயு தலைமையில் பேச்சுவார்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது .மேலும் வரும் 27ம் தேதி நல்ல முடிவு எடுக்காவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீண்டும் மிக பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது .