நீட் தேர்வில் வெற்றி பெற எம்.ஜி.ஆர்.ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன் – க.மாதவன்

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் அங்குதான் தேர்வினை எழுத வேண்டும் என்ற கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயண செலவு தொடங்கி தங்கும் செலவு வரை, ஏழை மாணவர்கள்தான் சொந்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை. பாட சுமையுடன் கூட தற்பொழுது பொருளாதார சுமையும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும்.
தமிழக அரசு , வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் பாதுகாப்பாகவும் போதுமான வசதிகளுடனும் தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள கட்டாயம் உதவிகள் செய்திட வேண்டும்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்வினை தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டு, வெற்றி பெற எம்ஜிஆர்ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.

க.மாதவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *