திருச்சி அருகே காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து பலியான உஷாவின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
மகளிர் தினத்தன்று சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கமல், திருவெறும்பூர் உஷாவின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று திருச்சியில் உஷாவின் குடும்பத்தினரை சந்தித்து கமல் ஆறுதல் கூறினார். அப்போது, ஏற்கனவே அறிவித்தபடி, உஷாவின் தாயார் லூர்துமேரி மற்றும் சகோதரர் ராபர்ட் ஆகியோரிடமும், கணவர் ராஜாவிடமும் தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கமல்ஹாசன் அளித்தார்.