டிடிவி.தினகரன் ஒரு மண்குதிரை என்று விமர்சித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாப நிலையில் இருப்பதாக தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வது அதிமுக அல்ல; தேர்தல் ஆணையம் தான் எனக் கூறினார்.
2018-10-30