கோவையில் குழந்தைகளை கொன்று தந்தை தலைமறைவு

கோவை மாவட்டம் பீளமேடு மசகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன்(45). இவரது மனைவி செல்வராணி(38). இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் ஹேமவர்ஷினி(15), 3ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீஜா (8) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், செல்வராணி, வெள்ளலூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டு, இன்று காலை வீட்டிற்கு வந்த போது இரண்டு குழந்தைகளும் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடந்தனர். பத்மநாபன் தப்பியோடினார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *