மகளின் பள்ளித்தோழியை பாலியல் பலாத்காரம் செய்தவன் கைது

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மகளின் பள்ளித்தோழியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

பவனமங்கலம் கிராமத்திலுள்ள ஒரு செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தவன் கௌதமன். அவனோடு பணிபுரியும் மற்றொரு தம்பதியின் 16 வயது மகள், பள்ளி விடுமுறை நாளில் செங்கல் சூளை வேலைக்கு வந்து சென்றுள்ளார்.

அந்தச் சிறுமி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

திருவையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் கௌதமன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து அவனை போக்சோ மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியும் கௌதமனின் மகளும் வகுப்புத் தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *