கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் அடுத்த அகரம் இந்திரா நகரை சேர்ந்தவர் வீரன் இவர் அந்த பகுதியில்
கர்நாடகா மதுபாக்கெட்டுகளை கொண்டுவந்து. அனுமதியின்றி கூடுதல் விலைக்கு
விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று வீரன் கர்நாடகா மதுபாக்கெட்டுகளை வாங்கி வர
அருகிலுள்ள கர்நாடக மாநிலத்திற்கு சென்றுள்ளதாக உத்தனப்பள்ளி
போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து, போலீசார் இந்திரா
நகரில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வீரனை பிடித்து விசாரித்தபோது
இருசக்கர வாகனத்தில் சென்று கர்நாடகா மதுபாக்கெட்டுகளை வாங்கி வந்தது
தெரியவந்தது இதையடுத்து, போலீசார் வீரனிடம் இருந்து 50 க்கும் மேற்பட்ட
மதுபாக்கெட்டுகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து,
வீரனையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகினறனர்.