கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளியான படம் கரகாட்டக்காரன். ராமராஜன், செந்தில், கவுண்டமணி, கோவை சரளா, கனகா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் கங்கை அமரன் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், கரகாட்டக்காரன் படத்தில் நடித்த அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அனைத்தும் நல்லவிதமாக போய்க் கொண்டிருக்கிறது.
மேலும் இந்தப் படத்தில் கவுண்டமணி – செந்தில் கூட்டணி இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்கள் இல்லாமல் எப்படி சாத்தியம் என்றார்.