வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி ஏன்? – தயாரிப்பாளர் கேள்வி

க்யூப் நிறுவனத்திற்கு எதிராக போராடி வரும் தயாரிப்பாளர் சங்கம் கடந்த 16ந் தேதி முதல் படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவித்தது. இந்த நிலையில் சென்னை விக்டோரியா ஹாலில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் விஜய் படத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது தயாரிப்பாளர்களின் ஒற்றுமையை பாதிக்காதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி சன்பிக்சர்ஸ் விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் விஜய் படம் மட்டும் இல்லாமல் சமுத்ரகனியின் படத்திற்கும் சிறப்பு அனுமதி கொடுத்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *