போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற துணை நடிகை கைது

கர்நாடக மாநிலம் கோலாரைச் சேர்ந்த மமதா சென்னை சாலிகிராமத்தில் தங்கி சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தார். இதில் போதிய வருமானம் இல்லாததால் டான்சர் வாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல முடிவு செய்தார். ஏஜெண்டுகள் மூலம் குஷ்பூ என்ற பெயரிலும் காஞ்சிபுரம் முகவரியிலும் போலி பாஸ்போர்ட் பெற்ற இவர், ஓராண்டு விசா மூலம் துபாயில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நடனமாடுவதாக அவ்வப்போது சென்றுவந்துள்ளார்.

அந்த வகையில் கடந்த 20-ஆம் தேதி மம்தா துபாய் செல்ல முயன்றபோது சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆதார் கார்டின் அடிப்படையில் சந்தேகப்பட்டு விசாரித்ததையடுத்து மம்தா உண்மையை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு பாஸ்போர்ட் தடுப்பு போலீசார் மம்தாவை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *