பொருளாதாரத் தடைகளை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயத சோதனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுத சோதனைகளைத் தொடங்கப் போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது.

அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக் கொள்ள வடகொரியா ஒப்புக்கொண்டதையடுத்து கடந்த சில மாதஙகளுக்கு முன் சிங்கப்பூரின் செண்டோசா தீவில் அமரிக்க அதிபர் டிரம்ப் – வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் இன்னும் வடகொரியா மீதான சில பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாத நிலையில் வடகொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாவிட்டால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையைத் தொடங்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *