டெல்லியில் சிறுவனுடன் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் நகையை பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
டெல்லியில், கடந்த 26-ஆம் தேதி தயால்பூர் அருகே இரவில் சிறுவனைக் கையில் பிடித்துக் கொண்டு சாலையில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிர்திசையில் இருந்து பைக்கில் வந்த இருவரில் ஒருவன் , திடீரென பெண்ணின் கழுத்தில் இருந்த செயினைப் பறிக்க முயன்றான்.
பின்னர் பைக்கில் இருந்து இறங்கி கத்தி முனையில் பெண்ணின் கழுத்தில் இருந்த செயினைக் கழற்றிச் சென்றான். உயிர்பிழைத்த நிம்மதியோடு சிறுவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றபோதும், அப்பெண்ணை விடாமல் தடுத்திய நிறுத்திய அவன், கழுத்தில் வேறு ஏதேனும் நகையிருக்கிறதா? என பரிசோதித்துவிட்டு அனுப்பினான்.
கத்திமுனையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.