பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளையும் போராட்டத்திற்கு வாய்ப்புள்ளதால் ஈஃபிள் டவர் மூடப்பட்டது

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மீண்டும் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளதால் உலகப் புகழ்பெற்ற ஈஃபில் டவர் மூடப்பட்டுள்ளது. அந்நாட்டில் டீசல் மீதான வரி உயர்வுக்கு எதிராக கடந்த நான்கு வாரங்களாக ஞாயிறன்று பாரீசில் கூடி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து பொதுச் சொத்துகளும், தனியார் நிறுவனங்களும் தாக்கப்பட்டன. போலீசாருடனான மோதலில் 100 பேர் காயம் அடைந்தனர். 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் டீசல் மீதான வரி உயர்வை கைவிட பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியானது. ஆனாலும் வேறு பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்த சுமார் 85 ஆயிரம் பேர் பாரீசில் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரீசில் உள்ள ஈஃபில் டவர், அருங்காட்சியகம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *