தங்களுக்கு தொடர்ச்சியாக பணிகள் வழங்கினால் தாங்களும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று பிரான்ஸ் போலீசார், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை முற்றிலும் ரத்து செய்யக் கோரி கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தினசரி நடக்கும் போராட்டங்கள் போலீசாருக்கும் பெரும் தலைவலியைக் கொடுத்த வருகின்றன.
இதையடுத்து பாரீஸ் நகர போலீசார் சங்கம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், அதிகநேரம் தொடர்ச்சியாக பணியில் இருப்பதால் தங்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கவேண்டும் என்றும், இல்லையென்றால் தாங்களும் போராட வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தனர். இதையடுத்து கூடுதல் ஊதியம் வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.