சிங்கப்பூரில் பார்சல் டெலிவரிக்கும், பாதுகாப்புப் பணிகளுக்கும் ட்ரோன்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதிநவீன வசதியுடன், துல்லியமாக படம் பிடிக்கக் கூடிய ட்ரோன்களை டெலிவரிக்கு சோதனை செய்ய, 500 ஏக்கர் பரப்பிலான உயர் மட்ட கட்டிடங்கள் உள்ள பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ளதுபோல், பார்சல், மருந்துப் பொருட்கள், பீட்ஸா உள்ளிட்டவை இதன் மூலம் டெலிவரி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் எல்லையில் அத்துமீறும் நபரைக் கண்டுபிடித்து, அவரைப் படம்பிடித்துக் கொண்டே துரத்திச் சென்று இருப்பிடத்தை அதிகாரிக்கு காட்டிக் கொடுக்க ட்ரோன் பயன்படுத்தப்படுவது போன்று, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அதைப் பயன்படுத்த சிங்கப்பூர் கருதியுள்ளது. ஆனால் ட்ரோன்களை பயன்படுத்தினால், தனிப்பட்ட நபர் சுதந்திரம் பாதிக்கும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.