சீனாவில் ஓட்டுநரிடம் வாக்குவாதம் நடத்திய பயணியால், பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்த கோர விபத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 28-ம் தேதி, சீனாசின் சாங்கிக் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, லியூ எனும் 48 வயது பெண் ஒருவர், தமக்கான பேருந்து நிறுத்தத்தில் இறங்க மறந்துவிட்டார். நிறுத்தம் கடந்ததும் நினைவுக்கு வந்ததால், ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்துமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கவனத்தை வாக்குவாதத்தில் செலுத்திய ஓட்டுநர், பேருந்தின் ஓட்டத்தைக் கண்காணிக்கத் தவறியதால், அது, பாலத்தின் தடுப்பை இடித்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்தது.
இந்த கோர விபத்தில் ஓட்டுநர் உள்பட 13 உயிர்கள் பரிதாபமாக பலியானது குறிப்பிடத்தக்கது