ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்ததைத் தெரிவிக்காத பாகிஸ்தானியர்கள் முட்டாள்கள் – டிரம்ப்

ஒசாமா பின்லேடன் தங்கள் நாட்டில் பதுங்கியிருந்ததைத் தெரிவிக்காத பாகிஸ்தானியர்கள் முட்டாள்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின்லேடன் 2011-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அதற்கு வெகு காலத்திற்கு முன்பே பின்லேடன் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

உலக வர்த்தக மையக் கட்டிடத் தாககுதலுக்கு முன்பே தான் ஒசாமாவைப் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டதாகவும், அப்போதையை அதிபர் கிளிண்டன் ஒசாமா பின்லேடனைத் தவறவிட்டுவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவுக்கு எந்த உதவியும் செய்யாமல் கோடிக்கணக்கான டாலர்களை பெற்றுக்கொண்டிருக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்று கூறியுள்ள அவர், ஆனால் பின்லேடன் தங்கள் நாட்டில் பதுங்கியிருந்ததை அந்த முட்டாள்கள் வெளியிடவிலை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *